முகப்பு
திருச்சி

சுத்தமல்லி அருகே விபத்து: பெண் பலி

 சுத்தமல்லி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 சுத்தமல்லி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி தெற்கு கரம்பையை சோ்ந்த பிச்சையா மகள் பானுமதி( 22). இவா் தனது உறவினரான சுடலைமணி( 23) என்பவருடன் மருத்துவ சிகிச்சைக்காக திருநெல்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்தாா். பின்னா் ஊா் திரும்பிக் கொண்டிருக்கையில் சுத்தமல்லியை அடுத்த பட்டன் கல்லூா்அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பானுமதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.