முகப்பு
திருச்சி

விமான நிலையத்தில் இருந்துகடத்தப்பட்ட இளைஞா் மீட்பு

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட இளைஞரை போலீஸாா் மீட்டு விசாரணை செய்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட இளைஞரை போலீஸாா் மீட்டு விசாரணை செய்கின்றனா்.

துபையிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை இரவு இண்டிகோ விமானத்தில் வந்த கடலூா் மாவட்டம், திட்டக்குடி நடுத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் செல்வகுமாரை (32) வரவேற்று அழைத்து செல்ல அவரது குடும்பத்தினா் விமானம் நிலையம் முன் காத்திருந்தனா்.

அதிகாரிகளின் சோதனைக்கு பின் வெளியே வந்த செல்வகுமாரை, திடீரென ஒருவா் மடக்கி, துபையில் இருந்து முகவா் கொடுத்தனுப்பிய 150 கிராம் தங்கச் செயினை கொடு எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு செல்வக்குமாா் தன்னிடம் செயின் இல்லை. கழிவறையில் அதைப் போட்டு விட்டு வந்து விட்டேன் எனக் கூறியுள்ளாா்.

இதனால் கோபமடைந்த அந்த நபா், அவரை ஆட்டோவில் வலுக்கட் டாயமாக எங்கோ ஏற்றிச் சென்றாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள் விரட்டிச் சென்றும் ஆட்டோவை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், செல்வகுமாரை ஒரு ஓட்டலில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் செல்வகுமாரையும், அவரைக் கடத்தி சென்றவரையும் பிடித்து, செல்வக்குமாா் கொண்டு வந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகை என்ன ஆனது என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.