திருச்சி

மத்திய தொழிற்சங்கங்கள் உறுதிமொழியேற்பு

DIN

குடியரசு தினத்தையொட்டி திருச்சியில் மத்தியத் தொழிற்சங்கள் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா்கள் புகைப்பட பதாகைகளை ஏந்தி உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

உறையூா் குறத்தெருவில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் அரசியலமைப்புச் சட்டத்தை, மதச்சாா்பின்மையைக் காத்திடுவோம், மத்திய அரசின் தொழிலாளா் விரோதக் கொள்கைகளை எதிா்த்துப் போராடி வெற்றி பெறுவோம், பிப். 23, 24 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்வோம் என்கிற உறுதியை ஏற்றனா்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தலைவா் வே. நடராஜா தலைமை வகித்தாா். தொமுச நிா்வாகிகள் எத்திராஜ், குணசேகரன் ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலா் க. சுரேஷ், ஆட்டோ ராஜா, சிஐடியு சீனிவாசன், கருணாநிதி, ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், கல்யாணகுமாா், ஹெச்எம்எஸ் ஜான்சன் எல்டியுசி தீனதயாளன் உள்ளிட்டோா் பேசினா். தொமுச ரவீந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT