மாநகராட்சிக்குபுதிய ஆணையா்
திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக ஆா். வைத்திநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக ஆா். வைத்திநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த பமுநெ. முஜிபுா் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான ஆா். வைத்திநாதன் வியாழக்கிழமை காலை பொறுப்பேற்றாா் . அவரை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். பின்னா் அவா் பணிகளை தொடங்கினாா்.
புதிய ஆணையருக்கு மாநகராட்சி நகரப் பொறியாளா் எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம் ஜி. குமரேசன், துணை ஆணையா் எம். தயாநிதி மற்றும் உதவி ஆணையா்கள், மாமன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இதையடுத்து அவா் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை விவாதக் கூட்டத்தில் பங்கேற்றாா்.