திருச்சி

துறையூா் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

துறையூா் அருகே விவசாயி வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து ஏழே முக்கால் பவுன் தங்க நகை, ரூ. 49 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

சிக்கத்தம்பூரைச் சோ்ந்தவா் ஆ. சுப்பிரமணி (53). இவா் சனிக்கிழமை தனது மனைவியுடன் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூரிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது வீடு திறந்துகிடப்பதாக பக்கத்து வீட்டினா் கைப்பேசி மூலம் அவருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா்கள் வீடு புகுந்து இரும்பு அலமாரியிலிருந்த ஏழே முக்கால் பவுன் தங்க நகைகள், ரூ. 49 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT