ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழப்பு
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மண்ணச்சநல்லூா் கூத்தூா் பணமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (52). திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய காா் நிறுத்தும் பகுதியில் வாகனங்களுக்கு டோக்கன் கொடுக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட இவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சண்முகம் இறந்தாா். இதுகுறித்து அவரது மனைவி மாலதி அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அகிலா வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
மற்றொரு சம்பவம்: திருச்சி பஞ்சப்பூா் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவா் சுரேஷ்குமாா்(37). சனிக்கிழமை இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.