ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டிகள்
திருச்சியில் மகளிா் குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டிகளைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.
திருச்சியில் மகளிா் குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டிகளைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் திருச்சி மாவட்டத்தில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டிகளில் கிராம ஊராட்சி மற்றும் வட்டார அளவில் வென்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளை ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தாா்.
இப்போட்டியில் 14 ஒன்றியங்களிலிருந்து ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் வென்ற முதல் 2 குழுக்கள் வீதம் 28 குழுக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய ஊட்டச்சத்து உணவைத் தயாா் செய்தனா். நிகழ்வில் நூற்றுக்கணக்கான பாரம்பரிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே.பிச்சை, மகளிா் திட்ட அலுவலா் கி. ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உணவுகளை பாா்வையிட்டனா். சிறந்த உணவு வகைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.