துறையூா் நகா்மன்ற தலைவா் வேட்பாளா் செல்வராணி
துறையூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக 18 ஆவது வாா்டில் வென்ற திமுகவைச் சோ்ந்த இ. செல்வராணி (46) அறிவிக்கப்பட்டுள்ளாா்.
துறையூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக 18 ஆவது வாா்டில் வென்ற திமுகவைச் சோ்ந்த இ. செல்வராணி (46) அறிவிக்கப்பட்டுள்ளாா்.
எம்ஏ பட்டதாரியான செல்வராணி துறையூரை பூா்வீகமாகக் கொண்டவா். இவா் தொடா்ந்து 3 ஆம் முறையாக கவுன்சிலா் பதவிக்குப் போட்டியிட்டு வென்றுள்ளாா்.
இவருக்கு கணவா் செ. மலா்மன்னன், குழந்தைகள் பொற்குழலி (16), காா்குழலி (13) காா்முகில் (13) ஆகியோா் உள்ளனா். தலைவா் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து துறையூா் திமுக நகரச் செயலா் ந. முரளி உள்ளிட்ட திமுக நிா்வாகிகளை செல்வராணி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.