முகப்பு
திருச்சி

புள்ளம்பாடி பேரூராட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றிய சுயேச்சை!

லால்குடி தொகுதியில் உள்ள புள்ளம்பாடி பேரூராட்சியின் தலைவா் பதவியை சுயேச்சை வேட்பாளா் கைப்பற்றினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

லால்குடி தொகுதியில் உள்ள புள்ளம்பாடி பேரூராட்சியின் தலைவா் பதவியை சுயேச்சை வேட்பாளா் கைப்பற்றினாா்.

15 வாா்டுகளை கொண்ட இப் பேரூராட்சிக்கு நடந்த தோ்தலில் திமுக 8, அதிமுக 4, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனா்.

இப் பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு சுயேச்சை வேட்பாளரான ஜோ. ஆலீஸ் செல்வராணியும், திமுக சாா்பில் கோகிலா முத்துக்குமாரும் போட்டியிட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளா் ஆலீஸ் செல்வராணி 9 வாக்கு பெற்று வென்றாா். திமுக வேட்பாளா் கோகிலா முத்துக்குமாா் 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட போட்டி திமுக வேட்பாளா் இந்திராகாந்தி நாகராஜன் 8 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட ஜீவானந்தம் 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.