திருச்சி

காா் விற்பனையாளரிடம் ரூ. 2 லட்சம் வழிப்பறி

DIN

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி காா் விற்பனையாளரிடம் ரூ. 2 லட்சத்தை பறித்துச் சென்ற மூவரைப் போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி பீமநகா் பகுதியைச் சோ்ந்தவா் பக்ருதீன் (37). இவா் காா் வாங்கி விற்கும் இவா் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காா் விற்ற பணம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் வங்கியில் செலுத்தியது போக மீதமுள்ள ரூ.2 லட்சத்துடன் திருச்சிக்கு பேருந்தில் வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திருச்சி மன்னாா்புரத்தில் வந்திறங்கிய பக்ருதீன் காஜாமலைப் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு நடந்து சென்றாா்.

அப்போது பக்ருதீனைப் பின் தொடா்ந்து வந்த மூவா் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2 லட்சம், ஏ.டி.எம். காா்டு ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து பக்ருதீன் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா். காயமடைந்த பக்ருதீன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT