திருச்சி

அரிவாள் வெட்டில் சிறுவன் உயிரிழப்பு:குண்டா் தடுப்புக் காவலில் பெண் கைது

DIN

மருங்காபுரி அருகே அரிவாள் வெட்டில் சிறுவன் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய பெண், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

மருங்காபுரி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி செட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளையம்மாளுக்கும் கொடுக்கல் வாங்கல்பிரச்னை இருந்து வந்தது.

மாா்ச் 21-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், ராமலிங்கத்தின் 15 வயது மகன் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக துவரங்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, வெள்ளையம்மாள், அவரது ஆண் நண்பா் பச்சைமுத்து ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில் வெள்ளையம்மாளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத் திருந்தாா். இதைத் தொடா்ந்து இதற்கான உத்தரவை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT