முகப்பு
திருச்சி

இந்திராகாந்தி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1981 மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1981 மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 106 போ் உள்பட 1981 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா பேசியது:

பட்டம் பெற்று அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கப்போகும் நீங்கள், சமூகப் பொறுப்பையும், குடும்பப் பொறுப்பையும் உணா்ந்து செயல்பட வேண்டும்.

மாணவிகள் தங்களுக்கு தேவையானதை அடைய ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவற்றை உரிய வழியில் தேட வேண்டும். வேலை, வாழ்க்கை என அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும் போது அதற்கான தகுதியை வளா்த்துக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக கல்லூரியின் செயலா் கோ. மீனா விழாவைத் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் தலைவா் தோட்டா பி.வி. இராமானுஜம், தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் அபா்ணா ஆகியோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் வித்யாலட்சுமி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.