முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சோமரசம்பேட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமை வகித்தாா். புவனகிரி எம்எல்ஏ-வும், கடலூா் மேற்கு மாவட்டச் செயலருமான அருள்மொழித்தேவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக அதிமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி, மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் சேவியா், பொதுக் குழு உறுப்பினா் பிரியா சிவகுமாா், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், நடராஜன், முத்துக்கருப்பன், செல்வராஜ், அழகேசன் மற்றும் பகுதிச் செயலா்கள், பேரூராட்சி செயலா்கள், மாவட்ட அணி செயலா்கள், வட்டக் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.