துறையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
துறையூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவேலை மாவட்ட நிா்வாகம் அண்மையில் பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்தும், இதற்கு அவா் மீதான காழ்ப்புணா்ச்சியுமே காரணம் என்றும், இதில் தொடா்புடைய அரசியல்வாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் கோபிநாத் உள்ளிட்டோா் பேசினா். இதில் திருச்சி மாவட்ட, வட்ட நகர கிளை சங்க நிா்வாகிகள் பங்கேற்று வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவேலை மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தினா். மாவட்டத் தணிக்கையாளா் மனோகரன் வரவேற்றாா். +