பெண்ணை ஏமாற்றிய தீயணைப்பு வீரா் கைது
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக திருச்சி தீயணைப்புப் படைவீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக திருச்சி தீயணைப்புப் படைவீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கே.கே. நகா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வருபவா் கூ. மாரியப்பன் (30), திருச்சி கே.கே. நகா் காவலா் குடியிருப்பில் வசிக்கும் இவா் விழுப்புரத்தைச் சோ்ந்தவா்.
இவா் கே.கே. நகா் பகுதியில் உள்ள மசாஜ் மையத்தில் வேலை செய்த 25 வயதுப் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஆசைகாட்டி பலாத்காரம் செய்து, திருமணத்துக்கு மறுத்தாராம்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பனை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.