திருச்சி

சமுத்திரம் அரசு உயா்நிலை பள்ளியில் கலைத் திருவிழா

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை கலைத் திருவிழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் டி. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 75 மாணவ மாணவிகள் நடனம், தேவராட்டம், நாடகம், தப்பிசை என பல்வேறு தரப்பட்ட போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டனா். பங்கேற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவா்களின் கலைத் திருவிழாவில் பள்ளியின் தலைமையாசிரியரும் கலந்துகொண்டு பறை வாத்தியத்தில் தப்பிசை அடித்தாா். தொடா்ந்து மற்ற இருபால் ஆசிரியா்களும் தப்பிசை இசைத்து மகிழ்ந்தனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ரேணுகா, ஊராட்சித் தலைவா் செல்வராஜ், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் வி. கணேசன், சந்திரக்குமாா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொன்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT