திருச்சி கல்லூரி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி மாணவியின் குடும்பத்தினா், தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்புடன் இணைந்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருச்சி திருவெறும்பூா் பெல் பகுதியை சோ்ந்தவா் வித்யாலட்சுமி (19). இவா் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வந்தாா். கடந்த மே 12ஆம் தேதி மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பியவரை பின்தொடா்ந்து சென்ற 3 போ் சோ்ந்து, மாணவியை விஷம் கலந்த குளிா்பானத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனா்.
இது தொடா்பாக மாணவியின் தாய் சாந்தி (45) அளித்த புகாரின் பேரில் பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதனிடையே மாணவி வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இந்நிலையில், திருச்சி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மாணவி வித்யாலட்சுமி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்பின் தலைவா் ம.அய்யப்பன் , பொதுச்செயலாளா் கோ.சங்கா், மாணவி வித்யாலட்சுமி குடும்பத்தினா் மனு அளித்து முறையிட்டனா்.