திருச்சி

அதிக மாத்திரைகள் உட்கொண்டு மயங்கிய சிறப்பு முகாம் அகதிகள்

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 13 போ் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

DIN

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 13 போ் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன 153 வெளிநாட்டினா் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டம், தற்கொலை முயற்சி என பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை மாலை 13 போ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட் கொண்டு திடீரென மயங்கினா்.

இதையடுத்து அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா் அஜய்தங்கம் தலைமையிலான போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT