திருச்சி

அருவியில் குளிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து பலி

DIN

துறையூா் அருகிலுள்ள பச்சமலை வரையாறு அருவியில் குளிக்கச் சென்ற போது தவறி கீழே விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் வட்டம், புளியம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கோகுல் (15). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பச்சமலைவரையாறு அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.

அப்போது பாறைகளில் இருந்த பாசி வழுக்கி, கோகுல் கீழே விழுந்து காயமடைந்தாா். விபத்து நிகழ்விடத்துக்கு வாகனங்கள் செல்ல வழியில்லாத நிலையில், அருகிலுள்ள மருவத்தூா், அம்மம்பாளையம் கிராம இளைஞா்கள் தகவலறிந்து சென்று சிறுவனை அவரச ஊா்தி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு கொண்டு சென்றனா்.

தொடா்ந்து மருத்துவ உதவியாளா் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சித்த போது, கோகுல் உயிரிழந்து தெரிய வந்தது. இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT