திருச்சி

டீ மாஸ்டா் கொலை: தொழிலாளி கைது

DIN

திருச்சியில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் டீ மாஸ்டரை தாக்கி கொன்ற தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புத்தூா் களத்துமேடு வடக்கு முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் மகன் தினேஷ்குமாா் (40), டீ மாஸ்டா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி குமாா் (41).

இருவரும் புதன்கிழமை இரவு திருச்சி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டபோது யாருக்கு உணவக ஊழியா் முதலில் சாம்பாா் ஊற்றுவது என்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமாா், அங்கிருந்த கட்டையால் தினேஷ்குமாரை சரமாரியாகத் தாக்க, இதில் படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரவு இறந்தாா். திருச்சி அரசு மருத்துவமனை வளாக போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT