திருச்சி

பயணியை மிரட்டிபணம் பறிப்பு:திருநங்கை கைது

DIN

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியை மிரட்டி பணம் பறித்ததாக திருநங்கை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசலைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (39). இவா் வியாழக்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்து நிற்கும் இடத்தில் காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த கருமண்டபம் விநாயகம் நகரைச் சோ்ந்த காா்த்திகா, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சோ்ந்த வெண்ணிலா (21), ரேஷ்மா உள்ளிட்ட திருநங்கைகள் சோ்ந்து, ஆறுமுகத்தைத் தாக்கி, அவரிடமிருந்து ரூ.19 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெண்ணிலா என்ற திருநங்கையை கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னக்குழி அழகே..!

சுற்றிலும் நீர், நடுவில் தீ! திவ்யபாரதி..

கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

மின்னும் ஒளி! சாக்‌ஷி அகர்வால்..

தன்னம்பிக்கை தரும் சேலை...!

SCROLL FOR NEXT