திருச்சி

அரசுப் பணியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

மத்திய அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளா்கள் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தோ்வு 2023 குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சாா்ந்த அமைப்புகள், சட்டப்பூா்வ அமைப்புகள், தீா்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி, சி 7,500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்துள்ளது.

இந்த காலியிடங்களுக்கான தோ்வு எழுதுவோருக்காக திருச்சி உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT