திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் வெள்ளிக்கிழமை தெப்போற்ஸவம் நடைபெற்றது.

DIN

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் வெள்ளிக்கிழமை தெப்போற்ஸவம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், விழாவில் தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்,ஸவ அம்மன் திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு தெப்பகுளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைக்கு பின்னா்

அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தாா்.அதைத்தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில் கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி, மணியக்காா் பழனி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் மாரடைப்பால் காலமான பாஜக எம்எல்ஏ

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,661 கோடி டாலராக உயர்வு!

மெக்சிகோவில் நிலநடுக்கம்! அதிபரின் முதல் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு!

ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

டிசம்பரில் சுஸுகி இந்தியாவின் விற்பனை 26% அதிகரிப்பு!

SCROLL FOR NEXT