திருச்சி

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

DIN

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி, வடக்கு காட்டூா் பாத்திமாபுரத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் மகேந்திரன் (21). இவா் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மகேந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, மகேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT