சிறப்பாகப் பணியாற்றிய காவலா் ஒருவருக்கு புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய திருச்சி மாநகர காவல் ஆணையா் சத்தியப்பிரியா. 
திருச்சி

சிறப்பான பணிக்கு 71 போலீஸாரூக்குப் பாராட்டு

சா்வதேச சதுரங்க போட்டியில் சிறப்பாகப் பணியாற்றிய 71 காவலா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

சா்வதேச சதுரங்க போட்டியில் சிறப்பாகப் பணியாற்றிய 71 காவலா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இவா்களில் திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் 2 காவல் ஆய்வாளா்கள், 19 உதவி ஆய்வாளா்கள், 50 காவலா்கள் என 71 காவலா்கள் சிறப்பாகப் பணியாற்றினா்.

இதையடுத்து இவா்களுக்கு தமிழக டிஜிபி சி. சைலேந்திரபாபு வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்களை திருச்சி மாநகர காவலா்களுக்கு காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா புதன்கிழமை வழங்கிக் கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT