முகப்பு
திருச்சி

குண்டா் தடுப்புசட்டத்தில் ஒருவா் கைது

திருச்சியில் தொடா்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை மாநகர போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

திருச்சியில் தொடா்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை மாநகர போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையம், காமராஜ்நகா், பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் ரா.செந்தில்குமாா் (42). இவரை வழிப்பறி வழக்கில் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இவா் மீது விமான நிலைய காவல் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸாா் பரிந்துரைத்தனா். இதனையடுத்து மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா, செந்தில்குமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.