திருச்சி

காலமானார் சுவாமி கிருஷ்ணபிரேமி

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் வசித்து வந்த உபன்யாசகர் உ.வே. சுவாமி கிருஷ்ணபிரேமி (89) வியாழக்கிழமை அதிகாலை அரங்கன் திருவடி அடைந்தார்.

இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபன்யாசம் செய்து உள்ளார். மேலும் அனைத்து திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை பற்றிய பாடல்களையும் புண்ணிய நதிகளை பற்றியும் பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் பிறந்தது 31 ஆகஸ்ட் 1934, திருவடி அடைந்தது 31 ஆகஸ்ட் 2023. அவரது உடல் பிறந்த தேதியிலேயே திருவடியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உ.வே. சுவாமி கிருஷ்ணபிரேமி உடல் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் கரையில் உள்ள திருமங்கை மன்னன் படித்துறையில் தகனம் செய்யப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

SCROLL FOR NEXT