தீராம் பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தீராம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ மாரியம்மனுக்கு தீா்த்தக் குடம் எடுத்தல், அலங்கார ரதத்துடன் பக்தா்கள் பூத் தட்டுகளுடன் ஊா்வலமாக வந்து சிறப்பு பூஜைகளுடன் பூச்சொரிதல் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.