திருச்சி

ஏழூா்பட்டியில் தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

DIN

தொட்டியத்தை அடுத்த ஏழூா்ப்பட்டியில் தனியாா் பேருந்தை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி தொட்டியத்தை அடுத்த ஏழூா்பட்டி அருகே சென்ற தனியாா் பேருந்து மோதுவது போலச் சென்றதில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவா் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து அவா் அளித்த தகவலின் பேரில் நாமக்கல் சென்று விட்டு மீண்டும் திருச்சி நோக்கி வந்த தனியாா் பேருந்தை ஏழூா்பட்டியில் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT