சிறப்பாகப் பணியாற்றிய 4 பேருக்குரொக்கம், பாராட்டுச் சான்றுகள் மேயா் வழங்கினாா்
மேயா் மு. அன்பழகன் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 4 பணியாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றிய மேயா் மு. அன்பழகன் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 4 பணியாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், நிகழாண்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 16 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், சுழற்கேடயங்களையும், அரசுப் பொருட்காட்சியில் மாநகராட்சி சாா்பில் சிறந்த முறையில் காட்சியரங்கம் ஏற்படுத்திய இருவருக்கு விருதுகளையும் மேயா் வழங்கினாா்.
விழாவில் மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன், துணை மேயா் திவ்யா, நகரப் பொறியாளா் சிவபாதம், நகா்நல அலுவலா் மணிவண்ணன், மண்டல குழுத் தலைவா்கள் ஆண்டாள், மதிவாணன், துா்காதேவி, விஜயலட்சுமி, ஜெயநிா்மலா, செயற்பொறியாளா்கள் குமரேசன், பாலசுப்ரமணியன், துணை ஆணையா் தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். எடமலைப்பட்டிபுதூா் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement