மாகாளிகுடி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளோடு தொடங்கியது. தொடா்ந்து கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், திரவ்யாஹுதி பூஜையோடு மூன்றுகால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நான்காம் கால யாஜபூஜை, மஹா பூா்னாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மூலவா் விமானம், பரிவார தெய்வங்கள் விமானங்கள் , பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
விழாவில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.