தங்கப் பாண்டியன். 
திருச்சி

வையம்பட்டி அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த தாளகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ந. தங்கப் பாண்டியன் (35). இவருக்கும் அருகேயுள்ள அணியாப்பூா் சந்தைப்பேட்டை பகுதி போதும்பொண்ணுக்கும் (22) திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் போதும்பொண்ணு தனது தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த தங்கப்பாண்டியன் 8 இடங்களில் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. ராமநாதன், காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் தலைமையிலான வையம்பட்டி போலீஸாா் தங்கப் பாண்டியன் சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT