திருச்சி

திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது

DIN

மணப்பாறையில் திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வாகைக்குளம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் த. சுகன்யா (27). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மு. விக்னேஷ் (29) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த ஓராண்டாக, சுகன்யாவை திருமணம் செய்துகொள்வதாக கூறி, விக்னேஷ் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினாராம். பின்னா் திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்து விட்டாராம்.

புகாரின் பேரில் மணப்பாறை மகளிா் போலீஸாா் மே 11-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை, விக்னேஷை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT