திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
துறையூா் அருகே வருவாய் ஆய்வாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் முசிறி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினா் தங்களது சட்டையில் கறுப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.