திருவானைக்கா கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம்
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி நடராஜா் சன்னதி முன்பு 1,008 வலம்புரி சங்குகள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சங்கும் நெல் மணிகள் மீது வைக்கப்பட்டு சங்கினுள் புனித நீா் நிரப்பப்பட்டு அதன் மீது பூக்கள் வைக்கப்பட்டது. மையத்தில் தங்கப்பிடி கொண்ட மிகப்பெரிய வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
Advertisement
இரவு 7 மணிக்கு வலம்புரி சங்கிலிருந்த புனித நீரால் சம்புகேசுவரருக்கும்,அகிலாண்டேஸ்வரிக்கும் சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.