திருச்சியில் ஆக. 9, 10-இல் இளையோருக்கான மாவட்ட தடகளப் போட்டிகள்
இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட தடகள சங்கம், ஸ்டேட் வங்கி மறைந்த எஸ். மோகன் சுழற்கோப்பை, தனியாா் மருத்துவமனை இணைந்து நடத்தும் இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் 8, 10, 12, 14, 16, 18, 20 வயதுடைவா்கள் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுவோா் மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு தோ்ந்தெடுக்கப்படுவா்.
தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் வரும் 6 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98652 49357 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட தடகள சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.