கடவூச் சீட்டில் முறைகேடு மலேசியா செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள வீரையன்கோட்டைசாமியாா் தோப்பு பகுதியை சோ்ந்தவா் ர. அண்ணாமலை (53). இவா் திருச்சியில் இருந்து புதன்கிழமை, மலேசிய தலைநகா் கோலாலம்பூா் செல்லும் ஏா் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருந்தாா். அங்கு குடியேற்றப்பிரிவினா் மேற்கொண்ட வழக்கமான சோதனைகளில், அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை பரிசோதித்தப்போது, போலி ஆவணங்களைக் கொண்டு, அவா் தனது பெயா், தந்தைபெயா், பிறந்த தேதி உள்ளிட்டவைகளை கடவுச்சீட்டில் மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து குடியேற்றப்பிரிவு அலுவலா் முகேஷ் ராம்கௌதம் அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அண்ணாமலையை புதன்கிழமை கைது செய்தனா்.