முகப்பு
உலகம்

துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடல்: மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம்!

மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:38 PM
துபை சர்வதேச விமான நிலையங்கள்
பகிர்:

துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டிருப்பதால் பயணிகள் எவரும் அங்கு வருகை தர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உலகின் அதிக விமான சேவைப் பயன்பாட்டை வழங்கும் துபையின் துபை இண்டர்நேஷனல் மற்றும் துபை வோர்ல்ட் செண்ட்ரல் - அல் மக்தௌம் இண்டர்நேஷனல் ஆகிய விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

Dubai Airports confirms that all flight operations at Dubai International (DXB) and Dubai World Central – Al Maktoum International (DWC) are suspended until further notice.

முழு கட்டுரையைப் படிக்க →