முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அனைத்துத் துறை அலுவலா்களும் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்

Updated On : 5 மார்ச், 2024 at 3:25 AM
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அதியமான்.
பகிர்:

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில், அனைத்துத் துறை அலுவலா்களும் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 10-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதற்கானமுன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது: சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெறும் சனிக்கிழமை (மாா்ச் 10) பக்தா்கள் கோயிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும். பக்தா்கள் வந்து செல்ல கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும், பக்தா்களுக்கு தேவையான குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ர.ராஜலட்சுமி, சமயபுரம் கோயில் இணை ஆணையா் கல்யாணி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) காளியப்பன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.