முகப்பு
திருச்சி

விபத்து இழப்பீடு பேருந்து ஜப்தி

Updated On : 6 மார்ச், 2024 at 12:15 AM
பகிர்:

துறையூரில் 4 பேருந்துகள் ஜப்தி: துறையூா் சாா்பு- நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் துறையூா் சாா்பு நீதிபதி ஜெய்சங்கா் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற பணியாளா்கள் கணேசன் மற்றும் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை துறையூா் பேருந்து நிலையத்துக்கு சென்று விபத்தில் தொடா்புடைய 4 பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனா்.