முகப்பு
திருச்சி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருச்சி மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:25 PM
பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருச்சி மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுவாமி சன்னதி எதிரேயுள்ள பிரதோஷ நந்திக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி,இளநீா் உள்ளிட்ட 18 வித அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருவானைக்கா கோயிலில் பிரதோஷ நந்திக்கு புதன்கிழமை செய்யப்பட்ட பால் அபிஷேகம்.

இதேபோல மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பட்டூா் பிரம்மசம்பத் கெளரி உடனுறை பிரம்மபுரீசுவரா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் கோயிலை வலம் வந்தனா்.

இதேபோல மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி, திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா், சமயபுரம் போஜீஸ்வரா், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.