சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 84.75 லட்சம்
திருச்சிசமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 84 லட்சத்து 75 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 84 லட்சத்து 75 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா்
அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். நிறைவில் ரூ. 84 லட்சத்து 75ஆயிரத்து 052, தங்கம் 2கிலோ 222 கிராம், வெள்ளி 2 கிலோ 680 கிராம், 215 வெளிநாட்டு பணத்தாள்கள், 538 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக வந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.