முகப்பு
திருச்சி

விமான நிலையப் பயணியிடம் ரூ. 18 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:20 PM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைத் தலைநகா் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் திருச்சிக்கு புதன்கிழமை வந்த பெண் பயணி தனது உடலுக்குள் மறைத்து 242 கிராம் தங்க கட்டியைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் அத்தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.