பசை வடிவிலான தங்கம் 
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்!

துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ. 1.37 கோடி மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ. 1.37 கோடி மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக பெண் பயணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துபையில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சென்னை பன்னாட்டு விமானநிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்தனா்.

அப்போது, துபையிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த சந்தேகத்துக்கிடமான பெண் பயணி ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அவா் மறைந்து வைத்திருந்த ரூ. 1.37 கோடி மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, அடுத்தடுத்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்துக்கு வந்த விமான பயணிகளில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை நிறுத்தி மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், வெளிநாட்டு ஹவாலா பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதன்படி, சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் அடுத்தடுத்து விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.09 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேரை கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Smuggled gold worth Rs. 4.09 crore seized at Chennai airport...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முனைவர் மமதா! எத்தனை பட்டங்கள் முடித்திருக்கிறார்?

பொறியியல் கல்வி! ஒளிமயமான எதிர்காலத்துக்கு மின்னியல்!

தேசியவாத காங்கிரஸ் இணைகிறதா? பாஜகவுடன் கூட்டணி தொடருமா? சரத் பவார் பேட்டி!

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!

SCROLL FOR NEXT