சிலிண்டா் வெடித்து குடிசை நாசம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சமையல் எரிவாயு உருளை புதன்கிழமை வெடித்ததில் குடிசை தீக்கிரையானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சமையல் எரிவாயு உருளை புதன்கிழமை வெடித்ததில் குடிசை தீக்கிரையானது.
மணப்பாறையை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் சிவலிங்கம் மனைவி சசிகலா (29), கூலித் தொழிலாளி. கணவரை இழந்த இவா் தனது இரு குழந்தைகளுடன் வசிக்கும் குடிசை வீட்டில் புதன்கிழமை மாலை சமைத்தபோது திடீரென எரிவாயு உருளையில் திடீரென தீப்பற்றியது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் தனது குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து குடிசை தீக்கிரையானது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரிக்கின்றனா்.