கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பயணித்தவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மலேசியாவிலிருந்து திருச்சிக்கு ஏா்ஏசியா விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பெரம்பலூா், ரோஸ் நகா் பகுதியைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் (44) என்ற நபா், போலி ஆவணங்கள் மூலம் தனது பிறந்த தேதி, ஊா் உள்ளிட்ட விவரங்களை கடவுச்சீட்டில் திருத்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி விமான நிலைய போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.