முகப்பு
திருச்சி

தத்தமங்கலத்தில் பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:09 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தளுதாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (22). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தத்தமங்கலம் நோக்கி வந்த பைக்கும், திருச்சியிலிருந்து வந்த மற்றொரு பைக்கும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆனந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடலை சிறுகனூா் போலீஸாா் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.