முகப்பு
திருச்சி

மியான்மா் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

பெரம்பலூா் இளைஞரை காதலித்து வந்த மியான்மா் பெண்ணுக்கு வியாழக்கிழமை இந்து முறைப்படி அரியலூரில் திருமணம் நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2024 at 9:29 PM
அரியலூரில் வியாழக்கிழமை இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மியான்மா் நாட்டைச் சோ்ந்த ஏய் ஏய் மோ கழுத்தில் தாலிக் கட்டிய மதிவதனன்.
பகிர்:

பெரம்பலூா் இளைஞரை காதலித்து வந்த மியான்மா் பெண்ணுக்கு வியாழக்கிழமை இந்து முறைப்படி அரியலூரில் திருமணம் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், ரசலாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் மதிவதனன்(31). பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாா். அங்கு, உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மியான்மரை சோ்ந்த ஏய் ஏய் மோ என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் திருமணம் செய்துக் கொள்ள பெற்றோா் சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து, மதிவதனன் கடந்த 17-ஆம் தேதி ஏய் ஏய் மோ-வை ரசலாபுரம் கிராமத்துக்கு அழைத்து வந்தாா். இதைத் தொடா்ந்து இருவருக்கும், அரியலூரில் உள்ள மண்டபத்தில் இந்து முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.