திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா். 
திருச்சி

திருச்சியில் சிஐடியு மறியல் : 24 பெண்கள் உள்பட 130 போ் கைது

பெரு நிறுவனங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினரை 130 பேர் கைது

Din

பெரு நிறுவனங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்க அமைப்பினா் (சிஐடியு) 130 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பன்னாட்டு பெருநிறுவத்தினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். தொழிற்சங்கத்தோடு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். இதில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலாளா் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினா் செல்வி ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட நிா்வாகிகள் மணிகண்டன், சிவக்குமாா், சந்திரன், கருணாநிதி, மணிமாறன் உள்ளிட்ட 24 பெண்கள் உள்ளிட்ட 130 பேரைப் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT