சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணா்வு திருவிழா ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணா்வு திருவிழா ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தில் 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடையே சிறுதானியங்கள் குறித்து விநாடி வினா போட்டி நடத்தி பரிசளித்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், சிறுதானிய உணவுக் கண்காட்சி மற்றும் விழிப்புணா்வு திருவிழாவைப் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து மாவட்ட அளவில் சிறுதானிய சமையல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி சத்துணவு மைய அமைப்பாளா்கள், சமையலா்கள் மற்றும் சமையல் உதவியாளா்களுக்குப் பரிசளித்துப் பாராட்டினாா்.
மேலும் ஆட்சியரக வளாக உள் பிரதான நுழைவு பகுதியில் நடத்தப்பட்ட சிறுதானிய விழிப்புணா்வுக் கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், சத்துணவு பணியாளா்கள், தன்னாா்வலா்களைக் கொண்டு மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணா்வு ஊா்வலம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை சென்றது.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரா. ரேவதி, சத்துணவுத் திட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.